இன்சுலின் கருவியை கணினி ஹேக்கர்களால் தாக்க முடியும்

15.08.2011

Insulin pumps and monitors vulnerable to hacking
இன்சுலின் என்ற ஹார்மொன் குறைப்பாட்டால் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக கடைபிடிக்க இன்சுலின் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் இன்சுலின் பம்புகளை பயன்படுத்தும் டயாபடிஸ் நோயாளிகளுக்கு தற்போது புதிய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்சுலின் அளவை கணக்கிடும் கருவிகளையும், ரிமோட் மூலம் கணணி தகவல் திருடர்கள் (HACKERS) கட்டுப்படுத்த முடியும் என தற்போது தெரியவந்துள்ளது.

கணணி தகவல் திருடர்கள் இன்சுலின் பம்ப் கருவியை தாக்குவதால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளி தனக்கு தேவையான இன்சுலினை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெறக்கூடிய அபாயம் உள்ளது. ஜோராட் கிளிப் என்பவர் கணணி தகவல் பாதுகாப்பு நிபுணர். இவர் டயாபடிஸ் பாதித்த நோயாளியாகவும் உள்ளார். இன்சுலின் பம்புகளை கணணி தகவல் திருடர்கள் திருட முடியும் என்பதை இவர் தனது கருவி மூலம் லாஸ்வேசாஸ் நகரில் சோதனை செய்து உறுதிபடுத்தினார். கணணி தகவல் திருடர்கள் இதர மருத்துவக் கருவிகளையும் தாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

 
Free classifiedsense.com adsense Free indiaassets.com adsense Free dubaiassets.com adsense
Free abudhabiassets.com adsense Free adiyakkamangalam.com adsense Free dubaiadz.com adsense
Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense
Free betamil.com adsense Free chennaiclassify.com adsense Free sgclassify.com adsense