விண்ணில் ஒ​ரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்

15.02.2012

Five planets in the sky might visible
விண் வெளியில் கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் காண முடிவதில்லை. இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். புதன், வௌ்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களே இவ்வாறு ஒரே இரவில் தோற்றமளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது அனேகமாக பிப்ரவரி 22 யிலிருந்து 24 வரை மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுள் வௌ்ளி கிரகத்தை வெற்றுக்கண்களால் நாள்தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரையும், சனி செவ்வாய் ஆகிய கோள்களை தொலை நோக்கிகளை பயன்படுத்தாது சூரியன் உதித்து மறையும் காலப்பகுதியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Free sgclassify.com adsense Free dubaiassets.com adsense Free indiaassets.com adsense
Free dubaiadz.com adsense Free abudhabiadz.com adsense Free chennaiclassify.com adsense
Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free classifiedsense.com adsense Free abudhabiassets.com adsense Free betamil.com adsense